Total Pageviews

Sunday, March 30, 2014

ராமரின் மூல உபதேசம் என்ன?



திரேதா யுகத்தில்--10,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் பலதார & பலபுருஸ திருமண வாழ்வில் இருந்தனர்! பக்கத்து ஊர் மீது படையெடுத்து ஆண்களை கொண்று விட்டு பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாகவும் ஆடுமாடு செல்வங்களையும் கொள்ளயடித்து கொண்டுவருவது வீரம் என புகழபட்ட காலம்! சுக்ரீவனின் மனைவியை வாலி வைத்து கொண்டதற்காக ராமர் வாலியை கொண்றார்! அப்பொது வாலி ``ராமா இது எங்களுக்கு தர்மம் `` என்று சொல்லவில்லையா?


பலதார & பலபுருஸ திருமண வாழ்வில் இருந்த மனித சமுதாயத்திற்கு ``ஒருவனுக்கு ஒருத்தி`` என்கிற கொள்கையை கடவுளின் தூது செய்தியாக கொணர்ந்தவர் ராமரே!!அதற்காகவே அவர் பலமுறை இன்னலடைந்தார்!


இதற்கு ராமர் செலுத்திய விலை; விலை மதிப்பில்லாத தனது இளமையை--இளம் மனைவியை பிறிந்து வாடியது! தனது மனைவியையும் வாட்டியது!

1) தன்னை அழைத்த சூர்ப்பனகையின் இச்சையை தீர்க்க ராமர் மறுத்ததால் திருமனமாகி ஓராண்டிற்குள் சீதை ராவணனால் தூக்கி செல்லபட்டார்!!அதனால் இளம் மனைவியை பிறிந்தே வாடினார்!! அவர்களை மீட்ட தேடி அழைந்தார்!! மீட்டு கொண்டு அயோத்தி சென்றாலும் குடிமக்களின் அவதூறு பேச்சுக்காக மீண்டும் மனைவியை பிறிந்தே வாழ்ந்தார்!! ``ஒருவனுக்கு ஒருத்தி`` என்கிற கொள்கையை நிலைனாட்ட அவர் சில ஆண்டுகள் மட்டுமே இல்லற சுகத்தை அணுபவிக்க முடிந்தது! உலகமே சிற்றிண்பத்தில் பலதார --பலபுருஸ சுகத்தில் மூழ்கி திளைத்த போது ``ஒருவனுக்கு ஒருத்தி`` என்கிற கொள்கைக்காக அந்த சுகத்தை தியாகம் செய்ய வேண்டிவந்தது!!

2) கடவுள் சிலரை ராஜாக்களாக உயர்த்தி வைக்கிறார்! அந்த பதவியை அடைந்தவர்கள் தங்களிடம் உள்ள பதவியையும் அதிகாரத்தையும் தங்கள் இஸ்ட்டம் போல பயன்படுத்தி கடவுளின் சொரூபங்களான மனிதர்களை அடக்கி ஒடுக்கி ஆணவமாய் வாழதொடங்குகின்றனர்!! எங்கெங்கும் சர்வாதிகாரிகளாய் மனிதர்கள் மாறிவிடுகின்றனர்! ``சொன்னதை செய் சொன்னதை செய் சஸ்பெண்டு செய்வேன் என கண்ணை மூடிக்கொண்டு மிரட்டுவதை தான் நிர்வாகம்`` என்பதாக IAS IPS Acadamy களிலும் கற்று கொள்கின்றனர்! மிறட்டுவது தான் திறமையான நிர்வாகி எனவும் அவர்களின் முன்னால் கூணிகுருகுவது போல நடித்து விட்டு அவர்கள் போனதும் அவன் கிடக்கிறான் நாதாரி என திட்டி விட்டு அரைகுறையாக வேலையை செய்வதும் அரசுதுறைகளில் செயல்பாடாக போய்விட்டது!!

பதவிகளை அணுபவிக்கும் அளவு அந்த பதவிகளின் செயல்பாடுகளில் கர்மயோகம் வெளிப்படுவதில்லை! பதவியை கொடுத்த கடவுள் அதை எப்படி பயன்படுத்தவும் விட்டுவிடுகிறார்; ஆனால் நியாயதீர்ப்பு நாளன்று அவரிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்கிற உணர்தல் மனிதர்களிடம் இல்லை! அதிகாரிக்கு தனது கீழ் உள்ளவர்களை ஆட்டிபடைக்க அதிகாரம் உள்ளது ஆனால் தனக்கும் மேலான அதிகாரி கடவுள் என்கிற உள்ளார்ந்த பயம் இல்லாமல் துஸ்பிரயோகம் செய்யும் போது அவன் அரக்கனாகிறான்!!

ஒரு அதிகாரி முதலில் தனக்கு கீழ் உள்ளவர்களின் கஸ்ட்டனஸ்ட்டங்களை கருத்துகளை காது கொடுத்து கேட்க உள்வாங்க தெறிந்திருக்க வேண்டும் !! கீழ்மட்ட அணுபவங்களை ஜனநாயகமாய் உள்வாங்கி முடிவெடுத்து அதை அமுல்படுத்தும் போது சர்வாதிகாரியை போல அமுல்படுத்த வேண்டும்!அமுல் படுத்தும் போதே கீழுள்ளவர்களின் அணுபவங்களை உள்வாங்க வேண்டும்!! மாற்று கருத்துகளை பேச அணுமதிக்க வேண்டும்! சாதக பாதக அம்சங்களை நடுனிலையோடு சீர்தூக்கி பார்த்து முடிவெடுக்க வேண்டும்! பெரிய பாதிப்பில்லாத மாற்றுகருத்துள்ளவர்களை அரவணைத்து போகும் பக்குவமுள்ளவனே வெற்றிகரமான தலைவனாய் பரிணமிக்க முடியும்!

லெனின் கூட முடிவெடுக்கும் பொது உட்கட்சி ஜன நாயகம் இருக்க வேண்டும் செயல்படுத்தும் போது அந்த முடிவை சர்வதிகாரமாய் செயல்படுத்த வேண்டும் என்றார்! அவர் அப்படி பட்டவராய் இருந்ததால் வெற்றி பெற முடிந்தது !ஆனால் பதவிக்கு வந்ததும் மாற்றுகருத்து உள்ளவர்கள் அனைவரையும் ஸ்டாலின் கொன்றொளித்து ஆமாம்சாமிகளாய் சேர்த்து வைத்து இதன் பேர் ஒற்றுமை என்றார்! அறிவாளிகள் ஒழிக்க பட்டு அடிவருடிகளும் ஆமாம்சாமிகளுமாய் பதவிக்கு வந்து சில நாளில் முழு சோவியத்கூட்டமைப்பும் அக்கு வேராய் ஆணிவேராய் சிதறிவிட்டது!


இறைதூதர் ராமர் தன்னிஸ்டம் போல செயல்படுவது அரசனுக்கு அழகன்று நாளும் குடிமக்களின் கருத்தை அறிந்து சாதக பாதக அம்சங்களில் நீதியோடு நடுனிலை தவராமல் ஆட்சி செய்ய வேண்டும் என்கிற ராஜ நீதியை சொன்னவர்! வழக்கு உள்ளவர்கள் --பாதிக்க பட்டவர்கள் இரவுபகல் எந்த நேரமும் தன்னிடம் வருவதற்கு வசதி உண்டாக்கியவர்! குடிமக்களின் இன்னல்களை போக்குவதுதான் அரசனின் தலையாய கடமை அதை செய்வதற்கு அரசனுக்கு தூக்கம்-- ஓய்வு நேரம் தடையாய் இருக்க கூடாது என்றார்! அவரது சபையின் ஆராய்ச்சி மணி என்னேரமும் திறந்து வைக்க பட்டது! பொது மக்களின் கருத்தை அறிய அவர் தமது அதிகாரிகளை மட்டும் நம்பாமல் தானே மாறு வேடத்தில் குடிமக்களோடு கலந்து உறைவார்!


பொது மக்களுக்கு அப்பற்பட்ட அரச நீதி அவன் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட முன்னுதாரனமாய் வாழ வேண்டும் என்பதற்காக மீண்டும் சீதையை வணவாசத்திற்கு அணுப்பி விட்டு பிரமசாரியாகவே வாழ்ந்தார்!! ``மக்களுக்காகவே அரசன்!! அரசனுக்காக மக்கள் அன்று!!`` என்கிற ராஜ நீதியை வாழ்ந்து காட்டினார்! ஒரு அரசன் லோகங்களுக்கெல்லாம் அதிபதியாகிய கடவுளுக்கு பயந்து அவரது ராஜ்ஜியத்தில் தான் ஒரு அதிகாரி என்கிற கர்மயோகத்தில்--ராஜரிஸியாய் வாழவேண்டும் என்பதான கடவுளின் தூது செய்தி ராமர் மூலமாக வெளிபடுத்த பட்டது!


திரேதா யுகம் என்பது ஆதி மனித சமூகம் ! முதல் மனிதனான சிவன் படைக்கப்படும் போது தேவதுதனாக படைக்கப்பட்டு பின்னாளில் பூமிக்கு அனுப்பப்பட்டவர்


சரீரமான சகலவற்றிற்கும் தந்தை சிவனே  ! அவர் சதா தியானிக்கிவராகவே இருந்தார் ! ஏக இறைவனை பிரார்த்தித்து அவரை அடையும் பக்தியோக மார்க்கத்தின் குருவாக - தட்சினாமூர்த்தியாகவே தன்னை அறிவித்துக்கொண்டார் - ஆதி சித்தர் அவரே - சரீரங்களில் செய்யப்படும் சகல யோகங்களுக்கும் அவரே சற்குருவானவர்




ஆதிமனிதர்கள் --தமிழர்களிடம் ஒரு பரவலான பழக்கம் !ஆங்காங்கே குடி பெயர்ந்து சென்று அங்கே நிலைத்து பெருகும் போது பேர்சொல்லும் படி வாழ்ந்த தங்கள் மூதாதைக்கு அவ்விடத்திலே குலதெய்வ வழிபாடு செய்வார்கள் !அதை மைய படுத்தி தங்களை ஒரு புதிய குலமாகவும் அறிவித்து கொள்வார்கள் !

ஒரு சாதனையாளர் அல்லது ஞானி ,முனிவர் ,சித்தர் அடங்கினால் அந்த சமாதியின் மேல் ஒரு லிங்கம் வைத்து அவர் பெயரோடு ``ஈஸ்வரன் `` என சேர்த்து அதை கோவிலாக்கி வழிபடுவார்கள் !அதன் அர்த்தம் இவரும் கடவுளுக்கு இணை ஆகிவிட்டார் என்பதுதான் !!அகத்தியர் அடங்கிய இடம் அகத்தீஸ்வரம் ; கும்ப முனி அடங்கிய இடம் கும்பேஸ்வரம் இப்படி தமிழகத்தில் பல கோவில் ஸ்தல வரலாறுகள் உள்ளன !


அத்தோடு திரேதா யுகத்தில் அசுரர்கள் மனித பெண்களை திருமணம் முடிப்பது தடை செய்ய படாததால் இவர்களால் ``அரக்கர்கள் `` --மிக பலம்வாய்ந்த மனிதர்கள் உருவானதாக யூதர்களின் வேதத்தில் குறிப்பிட பட்டுள்ளது !நமது புராணங்களிலும் தவம் இருந்து வரம் வாங்கி அனேக அசுரர்கள் பிறந்து பூமியை ஆண்டு கொடுமை படுத்திய வரலாறுகள் உள்ளன !

இப்படி உருவான அரக்கர்கள் குலம் இலங்கையில் இருந்திருக்க வேண்டும் !கலியுகத்தில் கலிங்கத்திலிருந்து நாடுகடத்தப்ட்டு வந்த விஜயன் இந்த அரக்கர் குல பெண்மனியோருவருடன் சேர்ந்தே சிங்களவர்கள் உண்டானார்கள் ! இப்படி தவம் செய்து வரம் பெற்று தங்களை கடவுளுக்கு இணையாய் அறிவித்து கொண்டவர்களும் தங்கள் பெயருடன் ஈஸ்வரன் என சேர்த்து கொள்ளும் வழக்கின் படி ராவணனும் இலங்கையில் ஒரு பலம் வாய்ந்த பேரரசை நிறுவி தன்னை ராவணேஸ்வரன் என அழைத்து கொண்டிருக்க வேண்டும் !

தியானம் ;தவம் ; யோகங்கள் மூலமாக சரீரத்தில் பல சித்துக்கள் கைகூடியவுடன் அதனால் தன்னை ஈஸ்வரன் என அழைத்துக்கொண்டு ; பூமியில் கொடுமைகள் செய்வது அல்லது கடவுளை மறுத்து பக்தர்களை - நல்லவர்களை கொடுமை செய்வது என்ற ஆணவ போக்குகள் தலை தூக்கியத்தை அழித்து மீண்டும் பக்தி நெறியை ஸ்தாபிக்கவே - கடவுளை சற்குரு நாராயணன் மூலமாக வழிபடும் தூய வைணவ நெறியை ஸ்தாபிக்கவே ராமர் பூமியில் அவதரித்தார்
 

அவரின் ஆன்ம வாழ்வுக்கான உபதேசங்கள் மிகவும் அழகியவை யோகம் பயில்வோர் அவசியம் கற்கவேண்டியவை

அவர் அரசாட்சியை துறந்து கானகம் செல்லும் போது பின் தொடர்ந்த பரதனை திருப்பி அனுப்பி  அவனுக்கு உபதேசித்த போது இவை உபதேசிக்கப்பட்டன
 

ராம கீதை என அழைக்கப்படும் இவ்வுபதேசங்களை தொடர்ந்து கீழே படியுங்கள்  :


நாரயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன் !



ஓரிறைவனையே துதிக்கிறோம்

நாராயணன் நாமத்தினாலே    

ஓம் நமோ நாராயணா !!

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஓரிறைவனையே துதிக்கிறோம்
சிவனின் நாமத்தினாலே    
ஓம் நமோ சிவாய !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி  



இளமை !!



-- யுகபுருஷன் இறைதூதர் ராமரின் உபதேசங்கள் --

அறியாமையே மிகுந்திருக்கும் இளமையிலே மனம் சஞ்சலப்பட்டு அலைகிறது ! அலைபாயும் மனதின் பலவகையான விளையாட்டுப்போக்குகளுக்கு இளைஞர்கள் பலியாகிறார்கள் ! ஆகவே ஒரு மாயைக்கு பிறகு இன்னொரு மாயை ; ஒரு சிக்கலுக்கு பின்பு இன்னொரு சிக்கல் ; ஒரு துன்பத்திற்கு பின்பு இன்னொரு துன்பம் ; ஒரு தீய பழக்கத்துக்கு பின்பு இன்னொரு தீய பழக்கம் என்று எதிலாவது மாட்டிக்கொண்டு தவியோதவியென்று தவிக்கிறார்கள் ; அல்லாடுகிறார்கள் ! தங்களையும் தங்கள் நேரத்தையும் சிந்தனையையும் வீணாக்கி பிறரையும் பெற்றோரையும் துன்பத்தில் ஆழ்த்துகிறார்கள் !!

சுயகட்டுப்பாடு இல்லாத இளைஞர்களை இதயத்தில் இருக்கும் இச்சைப்பேய் -- காமப்பேய் -- மோகப்பேய் -- போதைப்பேய் தன் வசப்படுத்திக்கொள்ளுகிறது !!

இளமை என்ற பயங்கரமான காடு பலவிதமான விசித்திர ஆபத்துகள் நிறைந்தது ! அனுபவமிண்மை ; எதையும் அனுபவித்துப்பார்க்க துடிக்கும் ஆவல் ; விவேகமில்லா வீரம் ; வெளிகாட்டத்துடிக்கும் மாயப்பெருமை ; காமத்தை திரித்து புகழாக சித்தரிக்கப்பட்ட காதல் ; புத்திமயக்கம் ; குருட்டுத்துணிச்சல் என பல கண்ணிகள் அற்ப விசயங்களுக்காகவும் இளைஞனை காலைக்கட்டி விடுகின்றன !!

சுற்றிச்சுழன்று கொந்தளிக்கும் காட்டாற்று வெள்ளத்தைக்கூட கடந்து விடலாம் ; இளமைப்பருவத்தின் ஆசைகளைத்தவிர்ப்பது சுலபமானதல்ல ! விவேகம் இல்லாத விவகாரங்களில் துணிச்சலாக இறங்குகிறவனின் கதி அதோகதியாக முடிகிறது !!
சங்கடங்கள் நிறைந்த இளமைப்பருவத்தை தாண்டி பத்திரமாக மறுகரையை அடைந்தவர்களே வாழும் வழி தெரிந்தவர்கள் ! அவர்களே மனிதர்கள் என அழைப்பதற்கு தகுதி உள்ள வாழ்வு வாழ்வார்கள் !!

பெற்றோர்க்கும் மூத்தோர்க்கும் பணிவை அணிகலனாகக்கொண்டு , அன்பு முதலிய நல்லியல்புகளால் பிரகாசிக்கும் இளமையும் ; தன் பெற்றோர்கள் மூத்தோர்களால் வரும் வாழ்வை கடவுள் தனக்கு கொடுக்கும் வாழ்வாக முழுமனதுடன் ஏற்று அதனை சிறப்புற வாழ பக்குவப்பட்ட மனமுடைய இளமையும் போற்றுதலுக்குரிய இளமையாகும் ! அத்தகைய குணநலங்களுடன் கூடிய இளமை வாழ்வாங்கு வாழத்தகுதியும் கடவுளுடன் ஒப்புறவாவதிலும் முடியும் !!

உறைபனி பெய்தால் தாமரை அழிகிறது ! ஆற்றுவெள்ளத்தால் ஆற்றங்கரை மரங்கள் வீழ்கிறது ! அதுபோல முதுமையால் இளமை அழிகிறது !! மூப்பு வந்ததும் உடல் எல்லா அழகும் வணப்பும் குன்றி அவலட்சனமடைகிறது !! முதுமையால் ஏற்படும் தளர்ச்சியால் அங்கங்கள் ஆற்றல் குறைந்து சோர்ந்து போய் விடுகிறது !!

இளமை அமைதியில்லாதது ! அது யாரிடமும் நிலைத்து தங்குவதில்லை ! அதன் வணப்பும் கர்வமும் சின்னாளிலேயே கடந்துபோய் விடும் ! அதை பக்தியிலும் சத்சங்கத்திலும் கடறுகிற இளைஞன் பாக்கியம் பெற்றோன் !! 

ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே     
ஓம் நமோ நாராயணா !!அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

பக்தி பேராயுதம் !!





பக்தி சாதனத்தை சுருக்கமாக விளக்குகிறேன் பக்தி நெறியில் முதலாவது பின்பற்ற வேண்டியது இறைபயம் உள்ளோரின் கூட்டுறவை -- சத்சங்கத்தை நாடுவதுதான் !

இந்த உலகிலே என்னைப்புகழிடமாகக்கொண்டும் , என்னைத்தியானித்துக்கொண்டும் என்னுடைய புனித நாமத்தின் மூலமாக கடவுளை துதித்துக்கொண்டும் இருப்பவர்கள் என் காட்சியைப்பெறுவார்கள் . அவர்கள் கேளாமலேயே அவர்களுக்கு அந்த காட்சி கிட்டும் !

என்னிடம் ஆழ்ந்த பக்தி கொண்டும் ; சுத்த ஞானத்தை உடையவர்களாயும் பரம ஆனந்தத்தை அனுபவிப்பவர்களாயும் உள்ள யோகிகளைக்கண்டறிந்து அவர்களை குருவாக பின்பற்றுவோருக்கு மரணமில்லா பெருவாழ்வு கைக்கு எட்டி விட்டது என்றே நம்பலாம் !!

நீ ஆணாக இருந்தாலும் அல்லது பெண்ணாக இருந்தாலும் ஒரு பொருட்டே இல்லை ; ஜாதியும் பெயரும் பதவியும் பட்டமும் ஒன்றுக்கும் ஆகாது ! நீ வாழ்க்கையில் எந்த நிலையிலும் இருந்தாலும் கடவுளை வழிபட அவசியமான ஒரே ஒரு விசயம் பக்தி மட்டுமே ! யோகம் , தவம் ,தானம் ஆகியவற்றின் புன்னியபலமிருந்தும் ; வேதங்களை விசாரம் செய்வதனாலும் ,சாஸ்திரத்தில் விதிக்கபட்ட கர்மங்களை - சடங்காச்சாரமாக கடைபிடிப்பதாலும் ; வேதங்களில் உள்ள சட்டதிட்டங்களை நூல் பிசகாமல் கடைபிடிப்பதாலும் மட்டுமே ஒருவன் முழுமை அடைய முடியாது . அவன் யுகபுருஷன் என என்னை உணர்ந்து என் சற்குருத்துவத்திற்கு ஒப்புக்கொடுக்கும் போது மட்டுமே என் தரிசனம் அவனுக்கு வாய்க்கும் ; கடவுளைப்பற்றிய அனுபவம் சித்திக்கும் !!

கண் இருந்தும் இரவு நேரத்தில் தெளிவாக காணமுடியாதவை விளக்கு ஒன்று கிடைக்குமானால் தெளிவாக காணமுடிவதுபோல என்னிடம் பக்தி கொண்டுள்ளவர்களின் ஆத்துமாவானது சுயம் பிரகாசமடைந்து எதையும் தெளிவாக உணரத்தொடங்குகிறது - ஞானத்திற்குள் மூழ்குகிறது !!

பக்தியை வளர்த்துக்கொள்ளும் வழி இதோ உள்ளது :

என்னுடைய பக்தர்களுடன் சவகாசம் கொள்ளுவது , எனக்கு சேவை செய்வதாக கர்மங்களை ; கடமைகளை செய்துகொண்டிருப்பது , என்னுடைய மகிமைகளை கேட்பது ; படிப்பது , உள்ளார்ந்த பக்தியால் என்னை நேசிப்பது ; உணருவது , என் பெருமைகளைப்பாடுவது என்னுடைய எல்லா அவதாரங்களையும் நினைத்து நினைத்து நெகிழ்வது , ஒவ்வோர் அவதாரத்தின் உபதேசங்களையும் வாழ்வு வழிகாட்டல்களையும் கேட்டறிந்து கடைபிடிக்க முயலுவது ; ஒரு அவதாரத்தை போற்றி மற்ற அவதாரத்தை வெறுக்காமல் இருப்பது -- இந்த நல்வழிகளையெல்லாம் ஒருவன் தினந்தோறும் பின்பற்றி வந்தால் என் குருத்துவத்தால் அவன் சித்த சுத்தியையும் ஆத்தும சுத்தியையும் பெறுவான் !!

இவ்வாறாக என்னிடம் பக்தி கொண்டிருப்பவர்களுக்கு பாவசுத்திகரிப்பு உண்டாகி ஞானம் வந்து சேரும் ! தியாகமும் அஹிம்சையும் வாய்க்கும் ! பொறுமையும் அன்பும் மிளிரும் ; சாத்வீகத்தால் தெய்வீகம் பெருகி சகல மனுக்குலமும் ஈர்க்கப்பட்டு நல்லுபதேசம் நாடும் !! உபகுருத்துவமும் உண்டாகும் !!

முடிவாக பிறப்பு இறப்பு சக்கரத்திலிருந்து விடுபட்டு மரணமில்லா பெருவாழ்வு சித்திக்கும் !!  




நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் சேஷனின் நாமத்தினாலும் காமாஷியின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


 

உண்மையை உணர்க !!



--- யுகபுருஷன் இறைதூதர் ராமரின் உபதேசங்கள் ---


சேர்த்துவைத்த செல்வம் யாவும் ஒரு நாள் ஒன்றுமில்லாமல் அழியக்கூடியவை . உயர்ந்து நின்றவை ஒரு காலத்தில் சரிந்து தரை மட்டமாகின்றன . எவ்வளவுக்கெவ்வளவு நெருங்கி பழகுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு பிரிவு நிச்சயம் . சேர்ந்திருந்தவை ஒரு நாள் பிரிந்து விடுகிறது . எத்தகைய வாழ்க்கையும் மரணத்தை முடிவாக கொண்டது .

பழுத்து கனிந்த பழம் தரையில் வீழ்ந்து தான் ஆக வேண்டும் . அதுபோல் பூமியில் பிறந்த மனிதனும் இறந்துதான் ஆகவேண்டும் . இறப்பது நிச்சயம் ; இருப்பது நிச்சயமில்லை !
எவ்வளவு உருதியாக வீட்டைக்கட்டினாலும் காலப்போக்கில் வீடு இடிந்து அழிவதுபோல நாளடைவில் மூப்புக்கும் மரணத்துக்கும் வசமாகி முடிவெய்துகிறான் !

கோடைக்காலத்தில் சூரியனின் செங்கிரணங்கள் தண்ணீரை வற்ற செய்வதுபோல இரவும் பகலும் மாறிமாறி வந்து உலகிலுள்ள உயிரிணங்களின் ஆயுளை அபகரித்து செல்லுகின்றன .!
சூரியன் உதிக்கும் போது , ``பொழுது விடிந்துவிட்டது ; வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம் `` என்று மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் . சூரியன் மறையும் போதும் , `` சம்பாதித்ததை கொண்டு சுகமாயிருக்கலாம் `` என்று மகிழ்கிறார்கள் . ஆனால் சூரிய உதயம் மற்றும் மறைவின் போது தன் வாழ்நாளில் ஒரு நாள் குறைந்து விட்டது என்பதை உணர்வதில்லை !

ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கும் புதிய புதிய பருவ காலத்தின் ஆரம்பத்தை கண்டு மனிதன் மகிழ்கிறான் . ஆனால் தன் ஆயுட்காலமும் கழிவதை அவன் உணர்வதில்லை !

கடலில் வெவ்வேறான இடங்களில் மிதந்த இரண்டு கட்டைகள் எப்போதோ ஒன்று கூடுகின்றன . சிறிது நேரம் சேர்ந்தவாறே மிதந்தும் செல்லுகின்றன . பிறகு பிரிந்தும் சென்றுவிடுகின்றன . அதுபோலத்தான் மனைவி , மக்கள் , சுற்றத்தார் , செல்வம் யாவும் ஒன்று சேர வேண்டிய காலத்தில் ஒன்று சேருகின்றனர் ; பிரிய வேண்டிய காலத்தில் பிரிந்தும் விடுகின்றனர் !

சேர்க்கை எவ்வாறு நிகழ்கிறதோ அதுபோல பிரிவும் நிகழ்கிறது !

இயற்கையை மீறுவது என்பது யாராலும் முடியாது ! உயிரிணங்கள் தோன்றியபடியே இருப்பதில்லை ; முதுமையடைந்து இறந்துவிடும் !

இறந்ததை எண்ணி வருந்தலாமே தவிர திரும்ப கொண்டுவர மனிதரால் இயலாது . தன்னுடைய முறை வரும்போது மரணத்திலிருந்து தப்பித்துக்கொள்ளவும் முடியாது !
ஒரு யாத்திரை கூட்டத்தை பார்த்த வழிப்போக்கன் , `` நானும் உங்களுடன் வருகிறேன் `` என்று சொல்லி அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுகிறான் . அதிலிருந்து சிலர் பிரிந்தும் விடுகிறனர் . ஒரு நாள் அவனும் பிரிந்து விடுகிறான் . பின்னர் வேறொரு கூட்டத்திலும் சேர்ந்து கொள்ளுகிறான் !

அதுபோல நம்முடைய பெற்றோரும் பாட்டன்மார்களும் ஏற்கனவே இந்த கூட்டத்தில் சேர்ந்து பிரிதும் விட்டனர் ! நாமும் ஒரு நாள் பிரியத்தான் வேண்டும் . பின்பு வேறோர் பிறவியில் வேறொரு கூட்டத்தில் இருப்போம் . ஆகையால் பிரிவால் வருந்துவதால் என்ன பயன் ? இதில் புலம்புவதற்கு என்ன இருக்கிறது ?

ஆற்று வெள்ளத்தைப்போலவே ஆயுள் எப்போதும் ஒரு திசையில் போய்க்கொண்டுள்ளது . அது திசை மாறி வந்த வழியில் பாய்வது ஒருபோதும் நடவாது . மனிதனின் ஆயுட்காலமும் இடைவிடாமல் சுருங்கிக்கொண்டே இருக்கிறது . மரணத்தை தடுக்கவே முடியாது . இடையில் மனிதர்கள் அற்ப சந்தோசத்தை நாடி ஓடுகிறார்கள் . சந்தோசம் வேண்டும் ; அதை தர்ம வழியில் மட்டுமே பெற முயலவேண்டும் ! அதர்ம வழியில் பெற்ற சந்தோசம் ஒரு நாள் - ஒரு பிறவியில் துனபத்தை கொண்டுவந்தே தீரும் !

கிடைத்ததைக் கொண்டு மகிழ்பவர்களே நீடிய சுகத்தை அடைந்தவராவார் ! இருப்பதில் திருப்தியுற்றிரு ! இல்லாததில் நோகாதிரு ! கடவுளிடம் கேள் ! கிடைத்ததில் மகிழ்வுற்றிரு !! நன்றி செலுத்த கற்றுக்கொள் !!

வாழும் வழி !!



--- யுகபுருஷன் - இறைதூதர் ராமரின் உபதேசங்கள் -




உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கிக்கொண்டு பக்தி சிரத்தையுடன் ; உன் மேல் வாய்க்கும் கடமைகள் யாவற்றையும் கடவுளுக்கு அர்ப்பணமாக ஒவ்வொரு நாளும் சேவை செய்து வா ! நல்ல காரியங்கள் செய்வதில் ஒரே ஒரு நாள் கூட அசிரத்தையாக இருக்காதே !!

சத்தியத்தை கைவிடாதே ! எப்போதும் உற்சாகத்துடன் இரு . பிறவியும் மூப்பும் மரணமும் உனக்கு இயல்பானவையே என்பதை நினைத்து எப்போதும் பணிவுடன் நடந்து கொள் . மனைவி மக்களிடம் அளவுக்கு மீறிய பற்றும் பாசமும் கொள்ளாதே !


அதிர்ஷ்ட்டம் வந்து சேர்ந்தால் பிரமாதமாக மகிழ்ந்து போகாதே ! அதிர்ஷ்ட்டம் போய் விட்டால் மன வருத்தமும் கொள்ளாதே ! மனதை சம நிலையில் வைத்திரு !


ராமனாகிய நான் எல்லா படைப்புகளுக்கும் ஆதாரமாக விளங்குகிறேன் ! என்னிடமே உன் மனம் நிலைத்திருக்கட்டும் !


முக்தியை பெறுவதற்கு என் மூலமாக கடவுளிடம் பக்தி கொள்ளுவது மிகவும் அவசியம் . கண் இருந்தாலும் இருளில் நடந்து போவதற்கு நமக்கு ஒரு விளக்கு தேவைப்படுகிறது அல்லவா ? அதுபோல உனக்கு போதிய ஞானம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரியான வழியில் முன்னேறுவதற்கு ராம குருபக்தி இருக்க வேண்டும் !


ராம குருபக்தியை பெற்றால் போதும் . வேறு எதுவுமே வேண்டியதில்லை . என் சீடனுக்கு ஞானமும் விஞ்ஞானமும் வைராக்கியமும் தாமாகவே வந்து சேரும் . இது கடவுளின் சித்தமாகும் !


இந்த உபதேசத்தை சிந்தித்தும் பின்பற்றியும் வாழ்ந்து வருபவன் உண்மையில் ஞானியே ஆவான் . அவன் எல்லாப்பாவங்களிலிருந்தும் விடுபடுவான் !


இந்த உலகம் முழுவதிலும் நான் - யுகபுருஷன் நிறைந்திருப்பதை ஒருவன் உணரவேண்டும் ! ஆழ்ந்த நம்பிக்கையுடன் என்னிடம் குருபக்தி கொள்ளவேண்டும் ! அவ்வாறு செய்தால் ஒருவன் பரிசுத்தம் அடைவான் ; மகிழ்சி அடைவான் ; பேரானந்தம் அனுபவிப்பான் ; நன்மை பெறுவான் !

மனமும் உடலும் !!



-- இறைதூதர் ராமரின் உபதேசங்கள் ---


 
காமம் என்பது ஒரு பெரிய மரம் ! ஆசை என்ற கொடி அதைப்போர்த்தி மூடியிருக்கிறது ! அந்த மரத்திற்கு கணக்கிட இயலாத என்னற்ற கிளைகள் இருக்கின்றன ! அந்த கிளைகளின் மீது சுற்றி திரிகிற மனம் , தான் பெற விரும்பும் கனியை ஒரு நாளும் பெற முடியாது !

ஆபத்து ஏற்படும்போதும் ; மோகம் தங்களை ஆட்கொள்ளும் போதும் சோர்வடைந்து போகாத மக்கள் மிகவும் அபூர்வம் ! சுய நல லட்சியம் ஒன்று நிறைவேறியதுமே கர்வம் கொள்ளாதவர்கள் மிகவும் அபூர்வம் ! பெண்களின் கண் வீச்சுக்கு மனம் குழம்பாமல் இருக்கும் ஆண்கள் மிகவும் அபூர்வம் ! இத்தகைய அபூர்வமான மக்களை பொதுவாகப்பார்க்கவே முடியாது !

தான் விரும்பிய பொருள்  கிடைத்து விட்டால் கூட மனம் ஒருபோதும் திருப்தியடைவதில்லை ! ஒட்டைப்பானையில் எவ்வளவுதான் தண்ணீரை ஊற்றினாலும் அது நிறைவதில்லை அல்லவா ? அதுபோல லவ்கீக இன்பங்களை அடைவதில் பெரிதும் ஆவல் கொண்டுள்ள மனம் எப்போதுமே காலிப்பானைதான் ! அதற்கு எந்த இடத்திலும் அமைதி கிடைக்காது ! கூட்டத்திலிருந்து பிரிந்து வழி காணாமல் தவிக்கும் மானைப்போல !
அலைகளைப்போல எப்போதும் கொந்தளிப்புடன் இருப்பதுதான் மனதின் இயல்பு ! சஞ்சலத்திளிருந்து அதற்கு அவ்வளவு சுலபத்தில் விடுதலை கிடைப்பதில்லை ! ஒரு விநாடி கூட அது அமைதியாக இருப்பதில்லை ! புலனின்பங்களை பின்பற்றி பல திசைகளிலும் கலக்கத்துடன் ஓடியபடியே இருக்கிறது !

இந்த மனம் என்னும் பேய்க்கு உன்மையில் இருப்பு என்பது அறவே கிடையாது ! வீணான கற்பனையின் மூலமாக அது ஒரு வடிவத்தை ஏற்கிறது ! அந்த பேயை அடக்கி ஆள்வது மிகவும் கடினம் ! அது நம்மை நெருப்பை விட மிகவும் அதிகமாக எரித்து விடக்கூடியது ! வஜ்ரத்தை விட கடினமானது ! புலன் விசயங்களை நோக்கி பாய்ந்த படியே இருக்கிறது ! மாமிசத்தை பார்க்கும் காகம் அதை உண்பதற்கு பாய்ந்தோடுவது போல மனமும் புலனின்பத்தை நாடி பாய்கிறது !என்றாலும் மறுகணமே தான் நாடிய பொருளை விட்டு விலகியும் சென்றுவிடுகிறது !குழந்தைக்கு இருப்பதைப்போன்ற சலன புத்தி மனதின் இயல்பாக இருக்கிறது ! எந்த ஒன்றிலும் நிலையாக அது இருப்பதே இல்லை ! நீர்ச்சுழல் இருக்கும் கடலைப்போலவே , மனமும் மனிதனை எங்கோ கொண்டுபோய் தள்ளி விடக்கூடியது ! கடலைக்கூட வற்ற அடித்து விடலாம் ; மலையைக்கூட பெயர்த்து விடலாம் ; நெருப்பை கூட சாப்பிட்டு விடலாம் ; ஆனால் மனதை அடக்குவது கடைனமான காரியமாகும் !
மரத்திலுள்ள இலை விரைவில் பழுத்து தரையில் உதிர்ந்து விடுகிறது ! அதைப்போன்றதே இந்த உடலின் நிலை ! பொய் ஞானத்தில் உதிப்பது இந்த உடல் ! ஆகவே கனவு நிலையைப்போல உடலும் மோக மயக்கங்களால் நிறைந்து இருக்கிறது ! உடலின் நிலையாமை வெட்ட வெளிச்சமான விசயம் !

உடலுக்கு நேரும் வயோதிகம் என்ற நிலையை வென்றவன் யாரும் இல்லை ! மனிதனுடைய ஆசை எதுவும் நிறைவேறாத படி வயோதிகம் அடக்கி விடுகிறது !  மாலை நேரத்தை தொடர்ந்து இருள் சூழ்வதைப்போல ; வயோதிகத்தை தொடர்ந்து மரணம் வருகிறது !

உடலில் உள்ளும் புறம்பும் இருக்கும் எல்லப்பொருள்களையும் ஆராய்ந்து பார்த்து ; இந்த உடலில் நல்லது என்ற ஒன்று ஏதாவது இருக்கிறதா என்பதை சொல்லுங்கள் ? மனிதன் இறந்தபிறகு கூடவே செல்லாத இந்த உடலின் மீது நம்பிக்கை வைக்கலாமா ?

குழந்தைப்பருவத்திலே வேடிக்கையிலும் களியாட்டத்திலும் காலம் கடந்து போய் விடுகிறது . அந்த சமயத்தில் மனம் சிறிது கூட அமைதியின்றி அலைகிறது ! வாலிபப்பருவத்திலோ மக்கள் புலனின்பங்களை நாடித்திரிகிறார்கள் . ஆகவே அப்போதும் சாந்தி பெறுவதற்கு வழியில்லை ! மூப்பு வந்ததுமே உடல் நோய் வயப்பட்டு தளர ஆரம்பித்து விடுகிறது ! இந்த வயோதிக நிலையில் மனிதன் துன்பங்களையும் துயரங்களையும் மட்டுமே அனுபவிக்கிறான் !

பனி விழுந்து வாடிப்போன தமரையை விட்டு ஓடிப்போவதுதான் தேனீயின் இயல்பு . அதுபோல கொடிய நோயும் மூப்பும் இந்த உடலை வந்து தாக்கும் போது உயிராகிய தேனீ உடலை விட்டு பறந்து போய் விடுகிறது ! உலகமாகிய ஏரியும் முற்றிலும் வரண்டு போய் விடுகிறது !

இந்த உடல் மோகத்தில் அழுந்தியிருக்கும் ஆத்துமாவின் இருப்பிடமாக உள்ளது ! எது நிலையானது எது நிலையற்றது என பாகுபடுத்தி பார்க்கத்தெறியாமல் ஆத்துமா திண்டாடுகிறது ! மிகவும் சின்னஞ்சிரிய தூண்டுதல் கிடைத்தால் போதும் அது மகிழ்ச்சியில் பூரிக்கிறது அல்லது கண்ணீர் மல்க துன்பப்படுகிறது ! இந்த உடலைப்போல அருவருப்புக்கு இடமான , பரிதாபத்திற்கு உரிய , நல்ல அம்சம் எதுவுமே இல்லாத வெறொரு பொருளைப்பார்க்கவே இயலாது ! அப்படிப்பட்ட உடல் அதனை நம்பும் மனைதனை அறியாமையாகிய குழியில் தள்ளுகிறது !
உடலின் இயல்பு நிலையாமையே ஆகும் ! என்றாலும் அதற்குள்ள ஒரே ஒரு தகுதி ஆத்துமா மோட்சம் பெறுவதற்கு அந்த உடல் வேண்டும் ! ஆகவே மற்ற சாதாரண பொருளைப்போன்று அதனை தள்ளிவிடவும் கூடாது ; முற்றிலும் சிறந்த பொருள் என்று அதனை கொள்ளவும் கூடாது ! அதிலிருந்து கொண்டுதான்  ஆத்துமா மோட்சம் பெற முயற்சிப்பதற்கு முடியும் என்கிற அளவிலே மட்டுமே அதனை பேண வேண்டும் !

எனக்கும் உடலுக்கும் சம்பந்தம் கிடையாது ; உடலும் நானும் ஒன்று அல்ல ; நான் ஆத்துமா ; நான் மோட்சம் பெற இது போல பல உடல்களை கடந்து கொண்டிருக்கிறேன்  என்கிற உள்ளுணர்வை பெறும் மனிதன் உண்மையிலேயே சிறந்தவன் ஆவான் !!